இந்தியாவிடம் இருந்து மற்றுமொரு கடனை பெறும் இலங்கை! SamugamMedia

இலங்கை இந்தியாவிடம் இருந்த வெளிநாட்டு நிதி பரிமாற்ற வசதியின் கீழ் புதிய கடனை பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் சிரேஷ் பொருளாதார நிபுணருமான கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் வங்கி கல்வி மத்திய நிலையம் ஒழுங்கு செய்த விரிவுரை ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்தியாவிடம் இருந்து பெறும் இந்த கடனை இந்திய ரூபா நாணய அலகுகளில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதகவும் கடன் பெறுமதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அதன் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் டொலர்களாக இருக்கலாம் எனவும் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அந்த பணம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *