புத்தளத்தில் காதி நீதிபதி சரமாரியாக தாக்குதல்!samugammedia

புத்தளம் சிலாபம் வலயம் என்பவற்றிற்கு பொறுப்பாக உள்ள காதி நீதிபதி எம்.ஆர். மொஹம்மட்  நேற்று(26) இரவு சரமாரியாக தாக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அவர்களின் மகளின் வீட்டில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் மற்றும் அவரது மருமகன் இனைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளாகிய காதி நீதிபதி பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சிகிச்சைகளுக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *