சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க ஐக்கிய மக்கள் கூட்டணி தீர்மானித்ததா? – மதில் மேல் பூனையாக மனோ.! samugammedia

சஜித் பிரேமதாசவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவதற்கு ஐக்கிய மக்கள் கூட்டணி இன்னும் எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கவில்லை என பங்காளிக்கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும், கட்சி என்றதன் அடிப்படையில் தமது கட்சி வேட்பாளரை தீர்மானிக்கும் உரிமை ஐக்கிய மக்கள் சக்திக்கு உள்ளதாக மனோ குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, அவ்வாறானதொரு முடிவை எடுக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில்  அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *