அடிமையாக இருப்பதில் பெருமை கொள்கிறோம்! சாகர தெரிவிப்பு samugammedia

நாட்டுக்காக நிற்பதற்காக எம்மை அடிமைகள் என்று அழைப்பது பெருமைக்குரிய விடயம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

களுத்துறை தொகுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீடுகளுக்கு தீ வைத்தாலும், தாக்கினாலும் நாட்டுக்காக ஆரம்பிக்கப்பட்ட பயணம் நிற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காகவும் தேசிய பாதுகாப்பிற்காகவும் பொதுஜன பெரமுன இந்த பயணத்தை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply