கொழும்புவாழ் மக்களுக்கு சிக்கல்..! வெளியான அறிவிப்பு..!samugammedia

மின்சார சபையின் உயர் அழுத்த மின் பாதை அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 8 மணி முதல் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணி வரையிலான 18 மணிநேர நீர் விநியோகத் தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்படி கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்சை, கோட்டே, கடுவலை நகரசபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ பிரதேச சபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபை பகுதிகள், இரத்மலானை மற்றும் கட்டுப்பெத்த ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசெளகரியங்களுக்கு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கவலை தெரிவிப்பதோடு, நீரை முன்கூட்டியே சேமித்து வைத்து சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு 1939 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ள முடியுமெனவும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *