மக்களே அவதானம்…! வேலை பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபா மோசடி…!samugammedia

ஒரு கோடி ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆன்லைன் மூலம் வேலை வாய்ப்பு பெற்றுத்  தருவதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவிற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

94 இலட்சத்து 9 ஆயிரம் ரூபாவை சந்தேக நபர் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறத்த நபர் கரந்தெனிய, தெனகொட பிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.

நேற்றைய தினம் கல்கிசை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நபர், நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக ஒக்டோபர் 27 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *