வீட்டுச்சுவரில் ஓட்டை போட்ட யானை; தெய்வாதீனமாக உயிர் தப்பிய சிறுவர்கள்…!samugammedia

அனுராதாபுரம் கொரவப்பொத்தானை திம்பிரியாத்தலை பிரதேசத்தில் நேற்று இரவு யானையின் தாக்குதலினால் 9 வீடுகள் பாரிய சேதத்துக்குள்ளாகியுள்ளதுடன் சிறுவர்கள் தெய்வாதீனமாகக் உயிர்தப்பியுள்ளனர். 

குறித்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட  நபர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் , 

யானை ஒன்று வந்து தங்கள் குடியிருந்த வீட்டை தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

நேற்று இரவு  11 மணியளவில் மின்சாரம் தடைப்பட்ட வேளையில் யானை ஒன்று எமது குடியிருப்புக்குள் நுழைந்தது அதனை விரட்டுவதற்கு பிரதேசவாசிகள் பலமுறை முயன்றும் குறித்த முயற்சி பயனளிக்கவில்லை. 

அந்த யானை ஒரு வீட்டை தாக்கச் சென்றது அப்போது வீட்டில் தூக்கிக்கொண்டிருந்த இரு சிறுவர்களை பெற்றோர் தெய்வாதீனமாக வெளியே தூக்கிச்சென்றனர். அதன் பின்னர் யானை வீட்டு சுவரை உடைத்து தாக்கியுள்ளது. 

அத்துடன் குறித்த யானை, காலை 5.30 மணிவரை அங்கு நின்றதுடன் அதுவரை  9 வீடுகளை தாக்கிச் சேதப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *