நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்கள் தொடர்பில் வெளியான தகவல்..! samugammedia

 

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக நாட்டில் உள்ள மின்னுற்பத்தி நிலையங்களின் மின்னுற்பத்தி 58 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நீர் மின்னுற்பத்தி நிலையங்களைச் சார்ந்த நீர்த்தேக்கங்களின் கொள்ளளவு 84 சதவீதத்தை கடந்துள்ளதாக, 

இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியிலாளர் நோயெல் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, தேசிய மின் கட்டமைப்பில் அனல் மின் நிலையங்களின் பங்களிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *