மாதவிடாய் குறித்து விழிப்புணர் நாடகம்!

மாதவிடாய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ‘வாகை’ குழுவின் தெருநாடக ஆற்றுகை யாழில் நடைபெற்றது.

Save a Life நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆற்றுகை மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மை மற்றும் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு பயன்படுத்தும் நடைமுறைகள் குறித்து தெளிவு படுத்தும் விதமாக நடத்தப்பட்டது.

நாவாந்துறை தெற்கில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பதற்காகவும், வலுவூட்டுவதற்காகவும், Diakonia Asia ஆதரவுடன் ஆரோக்கியமான வாழ்வு, ஆரோக்கியமான தேர்வுகள் திட்டத்தின் மூலம் புதிய பிரச்சினைகளை புதிய கண்ணோட்டத்தில் அணுகுவதற்காக இந்த நாடகம் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *