யாழில் கணிசமாக அதிகரித்த மரக்கறிகளின் விலை…! மக்கள் விசனம்…!samugammedia

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில் மரக்கறிகளின் விலைகளும் உச்சத்தை தொட்டுள்ளது.

அந்தவகையில்,  யாழ் மாவட்டத்திலுள்ள சந்தைகளில் பாகற்காய் கிலோ 600 ரூபாவுக்கும் ,பச்சைமிளகாய் கிலோ 1600 ரூபாவுக்கும்,  கத்தரிக்காய் கிலோ 600 ரூபாவுக்கும், தக்காளி கிலோ 800 ரூபாவுக்கும் , பயிற்றங்காய் கிலோ 600 ரூபாவுக்கும்,  வெண்டிக்காய் கிலோ 400 ரூபாவுக்கும்,   பெரிய வெங்காயம் கிலோ 480 ரூபாவுக்கும் , சின்ன வெங் காயம் கிலோ 400 ரூபாவுக்கும் , கீரை ஒரு பிடி 160 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன . 

இந்நிலையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் மக்கள் தமக்கு வேண்டிய மரக்கறிகளை கொள்வனவு செய்வதற்கு தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *