யாழ் தொண்டைமானாறு வாவி திறப்பு…!samugammedia

நாட்டில் தற்போது நிலவும்  சீரற்ற காலநிலையினால்  கடந்த 12ஆம் திகதியில் இருந்து  20ஆம் திகதி வரையான காலப்பகுதியில் யாழ்ப்பாண மாவட்ட பெய்து வரும் கனமழை காரணமாக வடமராட்சி தொண்டமானாறு வாவி இன்று திறந்து வைக்கப்பட்டது.

கனமழை காரணமாக தேக்கி வைக்க முடியாத மேலதிக நீரினை கடற்பரப்பில் செல்லுவதற்கு திறந்து விடப்பட்டன. 

இன்றையதினம்(22) காலை யாழ் மாவட்ட நீர்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களினால் வாவி திறந்து விடப்பட்டன. 

குறித்த வாவியில் மீனவர்கள்  தற்போது மீன்பிடி  நடவடிக்கையில்  ஈடுபட்டு வருகின்றனர்.


Leave a Reply