இந்தியா Zee தமிழ் தொலைக்காட்சியின் ஸரிகமப பாடல் போட்டியில் யாழ்ப்பாணத்திலிருந்து பங்குபற்றி சாதனை படைத்துள்ள கில்மிஸா உதயசீலன் இன்றையதினம் யாழ்ப்பாண மறை மாவட்ட ஆயர் யஸ்ரின் ஞானப்பிரகாசத்தினை சந்தித்தார்.
ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் ஆயர் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் ஆசிரையும் வழங்கினர். இந்நிகழ்வில் செல்வி கில்மிஸா அவரின் குடும்பத்தினரும் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.