கெஹலிய வீட்டிற்கு முன்பாக மலர்வளையம்…! பொலிஸார் விசாரணை…!samugammedia

முன்னாள் சுகாதார அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பு உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பாக மலர்வளையம் அணிவிக்கப்பட்டமை தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மலர்வளையம் வைக்கப்பட்டமை தொடர்பில் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகள் பொலிஸில் மேற்கொண்ட முறைப்பாடுக்கமைய விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை, பவித்ரா ரம்புக்வெல்ல தனது முறைப்பாட்டில், சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கொழும்பு 07 இல்லத்திற்கு அருகில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய நம்புவதாக நீதவானிடம் மேலும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *