உலகிலேயே முதன்முறையாக டெங்கு தடுப்பூசி – பிரேசில் நாட்டு மக்களுக்கு ஏற்றப்பட்டது..!samugammedia

உலகிலேயே முதன்முறையாக, பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக ஏ.டி.எஸ். நுளம்புகளால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து, மக்களை பாதுகாப்புக்காக பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது.

உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது.

இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் (WHO)தெரிவித்துள்ளது.

Leave a Reply