ரொஷானின் 02 வர்த்தமானிகளையும் இரத்து செய்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின்!

 

இலங்கை கராத்தே டோ சம்மேளனம் மற்றும் இலங்கை மோட்டார் விளையாட்டு இடைக்கால குழுக்களை கலைத்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 28 ஆம் திகதி, அப்போது விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரொஷான் ரணசிங்க கராத்தே டோ சம்மேளனத்தின் பதிவை இடைநிறுத்தி, சங்கத்தின் பணிகளை தற்காலிகமாக நடத்துவதற்கு இடைக்கால குழுவை நியமித்தார்.

இது தொடர்பான இடைநிறுத்தத்தை ஏற்படுத்திய வர்த்தமானியை தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சர் இரத்துச் செய்து,

கராத்தே டோ சம்மேளனத்தின் விவகாரங்கள் கடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அதிகாரிகள் சபையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *