
இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்களையும் கடந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. 2024 ஜனவரி 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஐக்கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்துறை அமைப்பான சர்வதேச நீதிமன்றம் (International Criminal Court – ICC) காஸாவில் இனப்படுகொலை செயற்பாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது.





