பம்பலப்பிட்டியில் இரு பஸ்கள் மோதி விபத்து!

 

கொழும்பு  – பம்பலப்பிட்டி டுப்ளிகேஷன் வீதியில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில்  இன்று இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகின.  

கொழும்பிலிருந்து அளுத்கம நோக்கிப் பயணித்த பஸ்ஸும் கொழும்பிலிருந்து கல்கிஸ்ஸ நோக்கிச் சென்ற பஸ்ஸும் மோதியே விபத்துக்குள்ளாகின.

வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை திடீரென வீதிக்குச் செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *