இணைய பாதுகாப்பு சட்டம் இலங்கையின் பொருளாதாரத்தை பாதிக்கும்..! சமந்தா பவர் தெரிவிப்பு

 

கருத்துச் சுதந்திரத்தின் மீதான இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் தாக்கம் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் முதலீடு செய்வதற்கு தடைகளை ஏற்படுத்தும் என சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க நிறுவனத்தின் தலைவர் சமந்தாபவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஜனநாயக ஆட்சியின் முக்கியத்துவம் மற்றும் ஆலோசனை சட்டமியற்றும் செயல்முறை குறித்தும் இதன்போது இருவரும் விவாதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவித் திட்டம், ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து பணியாற்றுவதன் அர்ப்பணிப்பையும் சமந்தா பவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *