ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் இலங்கையர்கள்!

 இந்தியாவின் பிரபல கோடீஸ்வரராகிய முகேஷ் அம்பானியின் மகன், ஆனந்த் அம்பானியின் திருமண விழாவில் சமையலுக்கு சென்ற இலங்கை சமையல் கலைஞர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இந்திய கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமண வைபவத்திற்கு உணவு சமைப்பதற்காக இலங்கையில் இருந்து சென்ற 13 சமையல் கலைஞர்கள் இன்று (07) காலை இலங்கை திரும்பியுள்ளனர்.

சிலோன் கறி கிளப் உணவக சமையல் கலைஞர்கள்

இந்த சமையல் கலைஞர்கள் கொழும்பில் உள்ள சிட்ரஸ் ஹோட்டலில் உள்ள “சிட்ரஸ்” ஹோட்டல் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் “சிலோன் கறி கிளப்” உணவக சமையல் கலைஞர்கள் ஆவார்கள். வாடிக்கையாளர் கருத்து மற்றும் Google மதிப்புரைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை சமையல்காரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மார்ச் 03 ஆம் திகதி திருமண நிகழ்வில் கலந்துகொள்ளும் மக்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் வாய்ப்பு இலங்கை சமையற்காரர்கள் குழுவிற்கு வழங்கப்பட்டது.

அத்துடன், அவர்கள் தயாரித்த உணவின் தரம், சுவை மற்றும் பாராட்டுக்களின் அடிப்படையில், மார்ச் 04 ஆம் திகதி நிகழ்விற்கு மேலதிகமாக இரவு உணவையும் அவர்கள் தயாரித்துள்ளனர்.

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள “ஜாம்” நகரில் திரு. அம்பானிக்கு சொந்தமான தனியார் உயிரியல் பூங்காவில் ஆனந்த் அம்பானியின் திருமண விழா நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்வில் இலங்கை சமையற்காரர்கள் தவிர இங்கிலாந்து, துபாய், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்களும் பங்குபற்ரி இருந்தமை குறிப்பிடத்தக்கது.   

The post ஆனந்த் அம்பானியின் திருமண நிகழ்வில் இலங்கையர்கள்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *