தமிழர் பகுதிக்கு விஜயம் செய்த அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழரசு கட்சி உறுப்பினர்…!

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு இன்று எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க இன்றையதினம் கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.
முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சண்முகம் ஜீவராஜ் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார்.
மக்கள் சந்திப்பு இடம்பெற்ற பகுதியை அண்மித்து A9 வீதியில் “இணைந்த வடக்கு கிழக்கை நீதிமன்றம் வரை சென்று பிரித்த பெருமை ஜே.வி.பி யை சாரும் , சொந்த இனத்தையே அழித்த ஜே.வி.பி எங்கள் இனத்திற்கு எவ்வாறு தீர்வு தரும்” என எழுதப்பட்ட பதாதைகளை கட்டி எதிர்ப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *