யாழ்ப்பாணம் மீசாலை ஏ-9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், ஏ-9 வீதியில் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் சென்றவேளை எதிரே வந்த மோட்டார் சைக்கிளை மோதியது.
மேலதிக விசாரணை
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணையை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
The post யாழ் சொகுசு பேருந்து விபத்தில் ஒருவர் பலி! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.