மின்சாரக்கட்டண மறுசீரமைப்பு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி!

 

மின்சாரக்கட்டணத்திற்கான மறுசீரமைப்பு தொடர்பான புதிய சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர  தெரிவித்துள்ளார்.

இந்த சீர்திருத்தம் மறுசீரமைப்பனது, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்றைய தினம் (28) மீளாய்வு செய்யப்பட்டது.

புதிய சட்டமூலம் தொடர்பில் அமைச்சர் விஜேசேகர கூறுகையில், 

மறுபரிசீலனை செய்யப்பட்ட பின்னர், புதிய வரைவு சட்டமூலத்தை தொடர்வதற்கான சான்றிதழ் கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. 

புதிய சட்டமூலம் ஏப்ரல் இறுதி வாரத்தில் நாாடளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

எனவே, பங்குதாரர்கள் அல்லது ஆர்வமுள்ள நபர்கள் சட்டமூலத்தை மறுபரிசீலனை செய்ய குறைந்தது இரண்டு வாரங்களும், சட்டமூலத்தின் சட்டபூர்வமான தன்மையை எதிர்கொள்ள நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலிருந்து இன்னும் இரண்டு வாரங்களும் இருக்கும். 

மேலும், அபிவிருத்தி முகவர் மற்றும் பங்குதாரர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பிரச்சினைகள் சட்ட வரைவாளர் திணைக்களத்தினால் டிசம்பர் மாதத்தில் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வரைவு சட்டமூலத்தில் திருத்தங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

அது மாத்திரமன்றி, பெரும்பான்மை மற்றும் தமிழ் மொழி பெயர்ப்புகளில் உள்ள முரண்பாடுகளும் சரி செய்யப்பட்டுள்ளன. என தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *