யாழில் 75 கால் சாராயப் போத்தல்களுடன் சிக்கிய பெண்..!!

நேற்றைய தினம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஊரெழு பகுதியில் 36 வயதுடைய பெண்ணொருவர் 75 கால் போத்தல்கள் சாராயத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாரினால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவருக்கு எதிராக மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *