
கொழும்பு, பெப் 23: இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை செவ்வாய்க்கிழமை (22) சந்தித்தார்.
இதன்போது, பாகிஸ்தானின் நம்பகமான நண்பர் இலங்கை என்றும் இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் முக்கியத்துவத்தை வழங்குவதாகவும் இம்ரான்கான் குறிப்பிட்டார்.
மேலும், 2021 பெப்ரவரியில் இலங்கை வந்ததை நினைவு கூர்ந்த இம்ரான் கான், இரு நாடுகளுக்கும் இடையில் அணைத்து துறைகளிலும் வலுவான சகோதர உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் விரும்புவதாக தெரிவித்தார். மேலும், இலங்கை அரசு தலைவர்களின் பாகிஸ்தான் விஜயத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை கோடிட்டுக் காட்டிய வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன, சர்வதேச, பிராந்திய அளவில் பாகிஸ்தான் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார்.