திடீரென சரிந்து வீழ்ந்த மண்மேடு – ஒருவர் சாவு!

 

கேகாலை – வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று  புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. 

எலிபன்கமுவ, தொலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த போது திடீரென மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் காயமடைந்தவர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரது சடலம் வரக்காபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் வரக்காபொல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *