ஹொரணையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்..!

ஹொரணை – கிரேஸ்லேன்வத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் இன்று முற்பகல் இடம்பெற்றுள்ளது.

சொகுசு ரக கெப் வண்டியில் பயணித்த நபர் மீது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 35 வயதுடையவர்  சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply