தேயிலைத் தோட்டங்களுக்கான உர மானியம் அதிகரிப்பு…! விவசாய அமைச்சர் அறிவிப்பு

 

தேயிலை தோட்டங்களுக்கு தற்போது வழங்கப்படும் உர மானியத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

விவசாய அமைச்சில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த உர மானியத்தை 10 ஏக்கரில் இருந்து 50 ஏக்கர் வரை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இதுவரை 10 ஏக்கருக்கு மாத்திரமே இந்த உர மானியம் வழங்கப்பட்டு வந்தநிலையில்,

 எதிர்வரும் காலங்களில் அதனை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply