நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை…!35,000 பேர் பாதிப்பு…! 8 மரணங்கள் பதிவு…!

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 9,587 குடும்பங்களை சேர்ந்த 35, 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(29)  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பதுளை , நுவரெலியா  , புத்தளம்  ,காலி, இரத்தினபுரி  ஆகிய மாவட்டங்களில் 8 மரணங்கள் பதிவாகியுள்ளது.

அந்த வகையில், கனமழை, மின்னல்,திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று, மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக,  கம்பஹா  மாவட்டத்தில்  3636  குடும்பங்களை சேர்ந்த 14866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1 வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 545 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 4 குடும்பங்கள் உட்பட 125 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 

இதே வேளை களுத்துறை  மாவட்டத்தில் 1004 குடும்பங்கள்  உட்பட 3647 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 பேர் காயமடைந்துள்ளனர் அத்துடன் 5 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 915  பகுதியளவு சேதமடைந்துள்ளன.

கொழும்பில் 22 குடும்பங்கள் உட்பட 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 238 குடும்பங்கள் உட்பட 925 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில்  1269  குடும்பங்களை சேர்ந்த 4264பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3    உயிரிழந்துள்ளதுனர். அத்துடன்  ஐவர்  காயமடைந்துள்ளனர். மேலும்  125 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. அத்துடன் 3 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதே வேளை குருநாகல் மாவட்டத்தில்108 குடும்பங்கள்  உட்பட 372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 37 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இதே வேளை தென்மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை அனர்த்தங்களால் 2076 பேர் உட்பட 7189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 6பேர்  காயமடைந்துள்ளனர். அத்துடன்11 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  2119 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

அதனடிப்படையில் காலி மாவட்டத்தில் 1321குடும்பங்கள் உட்பட 4399 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 1 வீடு முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1235வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மாத்தறை மாவட்டத்தில் 588குடும்பங்களை சேர்ந்த 2177 பேர் பாதிக்கப்பட்டுள்ளநர் . அத்துடன் 4 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன்  569 வீடுகள் பகுதியளவில்  சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில்167 குடும்பங்களை சேர்ந்த  613 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார் . அத்துடன் ஒரு வீடு முற்றாக  சேதமடைந்துள்ளதுடன் 156 வீடுகள்  பகுதியளவு சேதமடைந்துள்ளன.

வடமாகாணத்தில் 447 குடும்பங்களை சேர்ந்துள்ள 995 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 14 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

கிளிநொச்சி மாவட்டதில் 437 குடும்பங்களை சேர்ந்த 962 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 5 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

யாழில் 8 குடும்பங்களை சேர்ந்த 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

முல்லைத்தீவில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

சப்பிரகமுவ மாகாணத்தில் 765 குடும்பங்களை சேர்ந்த 2846 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர்  உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 9 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 721 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 

இரத்தினபுரி மாவட்டத்தில் 714குடும்பங்களை சேர்ந்த 2682 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர்  உயிரிழந்துள்ளனர் .   மேலும் மூவர்  காயமடைந்துள்ள்ளனர் . அத்துடன் 5 வீடுகள் முழுமையாகவும் 670 வீடுகள் பகுதியளவிலும்  சேதமடைந்துள்ளன.

கேகாலை மாவட்டத்தில் 51 குடும்பங்களை சேர்ந்த 164 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 4 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன  அத்துடன் 51 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில்  4 குடும்பங்களை    சேர்ந்த 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 3 வீடுகள்   பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் மத்திய மாகாணம் கண்டியில் 121 குடும்பங்களை சேர்ந்த 455 பேர் பலத்த காற்று மற்றும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 117 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

நுவரெலியாவில் 86 குடும்பங்களை சேர்ந்த  342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 84 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

கண்டியில் 68 குடும்பங்களை சேர்ந்த 34 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அத்துடன் இருவர் காயமடைந்துள்ளனர். அத்துடன் 84 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

இதேவேளை வட மத்திய மாகாணத்தில் 74 குடும்பங்களை சேர்ந்த 263 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், அனுராதபுரம் மாவட்டத்தில் 48 குடும்பங்களை சேர்ந்த 172 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 47 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் பொலநறுவையில் 26 குடும்பங்களை சேர்ந்துள்ள 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

ஊவாமாகாணம் பதுளையில் 27 குடும்பங்கள் உட்பட 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பதிவாகியுள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றும் 2 பேர் காயமடைந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது. அத்துடன் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *