ரஷ்யா நடத்திய குண்டுவெடிப்பில் 7பேர் உயிரிழப்பு: உக்ரைன் தகவல்!

<!–

ரஷ்யா நடத்திய குண்டுவெடிப்பில் 7பேர் உயிரிழப்பு: உக்ரைன் தகவல்! – Athavan News

ரஷ்யப் படைகள் நடத்திய குண்டுவெடிப்பில் 7 பேர் உயிரிழந்ததாக, உக்ரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒடெசாவிற்கு வெளியே போடில்ஸ்கில் உள்ள ஒரு இராணுவப் பிரிவு மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஏழு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். அத்துடன் 19 பேரையும் காணவில்லை.

மரியுபோல் நகரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

ரஷ்யாவின் வான்வழித் தாக்குதலை எதிர்த்து தனது விமானப்படை போராடி வருவதாக உக்ரைன் இராணுவத்தின் அறிக்கைகள் தெரிவித்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.


Leave a Reply