குறிகாட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய ஆணின் சடலம்!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகாட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இதனை தொடர்ந்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை  குறித்த சடலமானது கரையொதுங்கியுள்ளது.

இந்த சடலம் ஆண் ஒருவருடையது. இருப்பினும் சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை. சடலம் மிகவும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

குறித்த சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *