
அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான நகரில் துணிக்கடை வைத்திருக்கும் மெளலவி ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம், ஹொரவ்பொத்தான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தன் கடைக்கு யாசகம் கேட்டு வந்த பெண் ஒருவரை, யாசகம் தருவதாக கடையின் அறை ஒன்றுக்குள் அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்தார் என கிடைக்கப் பெற்றிருந்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.