பல ரயில் சேவைகள் இரத்து..! பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

 

ரயில் ஒன்று தடம் புரண்டதால், கடலோர ரயில் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இன்று (09) காலை பாணந்துறை ரயில் நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி வந்த ரயில் ஒன்று கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு ரயில் பெட்டிகள் தடம் புரண்டுள்ளதாகவும், இதன் காரணமாக கரையோர ரயில் பாதையின் இரண்டு தடங்களும் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக காலியில் இருந்து இயக்கப்படும் ரயில்கள் கொம்பனித்தெரு ரயில் நிலையம் வரை மட்டுமே பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது வரை சீர் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் இதன் காரணமாக ரயில் சேவை வழமைக்கு திரும்ப இன்னும் சில மணித்தியாலங்கள் ஆகும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *