அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வெளிநாட்டு பெண்ணின் சடலம் மீட்பு

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து வெளிநாட்டு பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சடலம் நேற்றையதினம் குடியிருப்பின் குளியலறையிலிருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 66 வயதுடைய நெதர்லாந்து பெண் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply