
கொவிட் – 19 பெருந்தொற்றுப்பரவல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டாயத்தகனக் கொள்கையினால் பாதிக்கப்பட்ட தரப்பினரிடம் அரசாங்கம் மன்னிப்புக்கோரியிருப்பினும், தமது அன்புக்குரியவர்களைக் கட்டாயத்தகனம் செய்தமையினால் குடும்பங்கள் முகங்கொடுத்த உளவியல் பாதிப்பையும், துன்பத்தையும் சரிசெய்வதற்கு இந்த மன்னிப்பு போதுமானது அல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.




