
பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைவராக செயற்பட்ட சேவ் த பேர்ள் அமைப்பின் ஊடாக கொழும்பின் தெருவோர குழந்தைகளுக்கு வலமான எதிர்க்காலத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளே முன்னெடுக்கப்பட்டதாகவும், அவ்வாறு அவர்களை பொறுப்பேற்று கவனிக்காமல் இருந்திருப்பின் அவர்கள் போதைப் பொருள் கும்பல்களிலும், பாதாள உலகத்தினரினதும் பிடிக்குள் சிக்கி சமூக விரோத செயல்களில் ஈடுபட்டிருக்க அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் புத்தளம் மேல் நீதிமன்றில் சாட்சியம் அளிக்கப்பட்டது.





