தேர்தல் சட்ட மீறல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவித்தல்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச அதிகாரிகளால், தேர்தல் சட்டம் மீறப்படுமாயின் அது தொடர்பில், முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ள விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.

அதனடிப்படையில்  076-7914696 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ அல்லது 011-2505566 என்ற தொலைநகல் இலக்கத்திற்கோ முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும் எனவும் அந்த ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இலங்கை ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் புரட்டாதி மாதம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply