எல்லைத் தாண்டி மீன்பிடி- 22 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்…!

எல்லைத் தாண்டி மீன் பிடியில் இடம்பெற்ற இரண்டு விசைப்படகுகளுடன் இந்திய மீனவர்கள் 22 பேர் நேற்று இரவு குதிரைமலைப் பகுதியில் வைத்து கற்பிட்டி விஜய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் 22 பேரையும் அழைத்துச் செல்லப்பட்டு கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதன்பின்னர் இன்று(06) மாலை புத்தளம் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது இம்மாதம் 20ம் திகதி வரை விளக்கமறியளில் வைக்குமாறும் அடுத்த வழக்கை கற்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் முன்னெடுக்குமாறும் நீதவான் இதன்போது தெரிவித்தார்.

Leave a Reply