ஹரீன் மனுஷவை ஜனாதிபதி ஆலோசர்களாக நியமித்துள்ளமை தேர்தல் விதிமுறைகளிற்கு முரணானது – அனுரகுமார

 

  பெர்ணான்டோ மற்றும் மனுஸ நாணயக்காரவை ஜனாதிபதி தனது ஆலோசர்களாக நியமித்துள்ளமை தேர்தல் விதிமுறைகளிற்கு முரணான விடயம் என தேசிய மக்கள்சத்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலத்தின் போது புதிய நியமனங்களிற்கு தடை விதித்து தேர்தல் ஆணைக்குழு உத்தரவை வெளியிட்டுள்ளது, இந்த உத்தரவை ஜனாதிபதி மீறியுள்ளார்.

அவர்களின் முன்னைய அமைச்சுகளின் ஆலோசகர்களாக ஜனாதிபதி அவர்களை நியமித்துள்ளார்,இதன் மூலம் அவர்கள் அந்த அமைச்சுகளின் நடவடிக்கைகளில் தலையிடலாம், ஊதியம் பெறலாம்,வாகனங்களை பெறலாம்  என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply