யாழில் வீசிய கடும் காற்று – தூக்கியெறியப்பட்ட குடியிருப்பின் கூரைகள்!

  

யாழ்ப்பாணத்தில் இன்று காலை முதல் அசாதாரண காலநிலை நிலவி வருகின்றது. 

சில இடங்களில் காற்றும், பலத்த மழையும் பெய்து வருவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை இன்று வீசிய பலத்த காற்றினால் யாழ் நகரை அண்மித்த குருநகர் தொடர்மாடி குடியிருப்பில் பெருமளவிலான குடும்பங்கள் வசித்து வருகிற அக்குடியிருப்பின் மேற்கூரைகள் பறந்து சென்றுள்ளன.

இதனால் குடியிருப்பு பகுதியளவில் சேதமடைந்ததுள்ளது.

Leave a Reply