முச்சக்கர வண்டியுடன் மோதிய வான் – மோசமான வானிலையால் விபரீதம் – 9 பேர் படுகாயம்

 

புல்மோட்டையிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வேன் ஒன்று இரண்டு முச்சக்கர வண்டிகளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மோசமான வானிலை காரணமாக வேன் இரண்டு கார்களை முந்திச் செல்லச் சென்றபோது, எதிர்திசையில் மோட்டார் சைக்கிள் ஒன்று சென்றமையினால் விபத்தைத் தவிர்ப்பதற்காக வேனை சாரதி இடது பக்கம் திருப்பி முச்சக்கர வண்டியுடன் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளான முச்சக்கரவண்டி முன்னால் சென்ற முச்சக்கரவண்டியின் மீது மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a Reply