ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் அமைச்சர் நாவின்ன ரணிலுக்கு ஆதரவு

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க பொருத்தமானவர் என முன்னாள் அமைச்சர் எஸ். பி நாவின்ன தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்காக ஆற்றிய பணிகளை நாட்டின் அனைத்து பிரஜைகளும் மறந்துவிடக் கூடாது.

நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்காக 4 வருடங்களின் பின்னர் தான் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்ததாக எஸ். பி.நாவின்ன தெரிவித்தார்.

Leave a Reply