ஜனாதிபதி தேர்தலின் பின் உள்ளுராட்சி தேர்தல்; நீதிமன்ற தீர்ப்பு மக்களிற்கு கிடைத்த வெற்றி! – மகிந்த தேசப்பிரிய

  

உள்ளுராட்சி தேர்தல்கள் குறித்து உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மக்களிற்கு கிடைத்த வெற்றி என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தலை தாமதப்படுத்தியது தவறான நடவடிக்கை என தெரிவித்துள்ள அவர் நீதிமன்றம்  இதனை உறுதி செய்துள்ளமை நீதியை நோக்கிய முக்கியமான நடவடிக்கை.

நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல. 

தேர்தல்களை பிற்போடுவது ஒத்திவைப்பது மக்களின் உரிமைகளை மீறும் செயல் என நீதிமன்றம் தொடர்ச்சியாக தெரிவித்துவந்துள்ளது.

தாமதமானாலும் இறுதியாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்ததும் தேர்தல்கள் ஆணைக்குழு  உள்ளுராட்சி தேர்தல்களை நடத்தும் என நான் எதிர்பார்க்கின்றேன் என மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply