
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி வெளியாகியிருந்தது. எனினும், இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே இலங்கை அரசியல் களத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துவிட்டது. குறிப்பாக முஸ்லிம் பெயர் தாங்கிய கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி முஸ்லிம் சமூகம் கூடுதல் ஆர்வம் கொண்டிருந்தது.




