புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்

<!–

புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழப்பு – யாழில் சம்பவம் – Athavan News

யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரதக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் மோதிய இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கூலி வேலை செய்து விட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 44 வயதுடய குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply