ரணிலின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஜனாதிபதி அநுர- நிமல் லான்சா பாராட்டு..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் சென்றமைக்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா, நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டுள்ளார்.

நீர்கொழும்பு வெள்ளவீதியிலுள்ள தேர்தல் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிலிண்டர் சின்னத்தில் பலமான வேட்பாளர்களை களமிறக்கவுள்ளோம். ஜனாதிபதி அநுரகுமார தேர்தலுக்கு முன்னர் அறிமுகப்படுத்திய பொருளாதாரத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவார் என ஆரம்பத்தில் நாம் நினைத்திருந்தோம், மாறாக ரணில் விக்கிரமசிங்கவின் பொருளாதாரக் கட்டமைப்பையே நாம் வரவேற்கின்றோம். ஜனாதிபதி அனுரகுமார ரணில் விக்கிரமசிங்கவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறார், இந்த அணுகுமுறைக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்குவோம். நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்ட கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் பொருளாதாரக் கொள்கைகள் வலுப்படுத்தப்பட்டதன் காரணமாக மீனவ சமூகத்திற்கு உர மானியம் மற்றும் ஆதரவை வழங்குவதற்கான திறன் கிடைத்தது என்றும் லான்சா குறிப்பிட்டார். இந்தக் கொள்கைகளில் இருந்து விலகுவது பொருளாதாரச் சரிவுக்கு வழிவகுக்கும் என்று அவர் எச்சரித்தார்.

“நாங்கள் வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறோம். ஜனாதிபதி அனுரகுமாரவின் நேர்மறையான நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிக்கும் அதேவேளை, மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் எந்தவொரு தவறுகளையும் அல்லது தீர்மானங்களையும் எதிர்ப்போம். சக்திவாய்ந்த மற்றும் பயனுள்ள எதிர்க்கட்சியை உருவாக்க எங்களுக்கு உதவுமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *