நாடளாவிய ரீதியில் இன்றிரவு மின்வெட்டு இல்லை! வெளியான அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், இன்று ஏ,பி,சி ஆகிய பிரிவுகளில் பகலில் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் மின்சாரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

எவ்வாறாயினும், கடந்த வாரம் இருந்த அதே அட்டவணையின் கீழ் நாளை முதல் ஒவ்வொரு பிரதேசத்திலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம் காரணமாக பல மின் உற்பத்தி நிலையங்கள் செயலிழப்பதால் இவ்வாறு மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply