
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரடிபோக்கு பகுதியில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கரடிப்போக்கு சந்தியில் இருந்து சுமார் 5 மீற்றர் தொலைவில் கால்வாயில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயரிழப்பானது விபத்தால் இடம்பெற்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அதற்கான தடயங்கள் வீதியில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





