
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாளமுக்கத்தால் இலங்கைக்கு ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக நாடு முழுவதிலும் தொடர்ச்சியான கன மழை பெய்து வருகின்றது. இதனால், கிழக்கு மாகாணத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், வடக்கிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்தோடு, மலையகத்திலும் அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன.