
இலங்கையின் வடக்கு முல்லை தீவு கடற்பரப்பில் அகதி அந்தஸ்து கோரி, ஆபத்தான படகுப் பயணம் ஊடாக வருகை தந்த ரோஹிங்ய முஸ்லிம்கள் கடந்த டிசம்பர் 19 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்ட சம்பவம், அதனை தொடர்ந்த நடவடிக்கைகள் என்பன தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றது. 115 பேருடன் வந்த இந்த படகில், 25 சிறுவர்கள் 30 பெண்கள் இருந்தனர். இவர்களில் 12 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன் ஏனையோர் முல்லைத்தீவு கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.