
புகலிடம் கோரி ஆபத்தான கடல் பயணம் ஊடாக இலங்கை வந்துள்ள 103 ரோஹிங்ய அகதிகளை மியன்மாருக்கு திருப்பி அனுப்ப வேண்டாம் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன.